
முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு!
நாடளாவிய ரீதியில் முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணங்களை இன்று திங்கட்கிழமை முதல் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை பயணிகள் போக்குவரத்து அதிகார சபை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 110 ரூபாயாகவும், ஏனைய ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் 90 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இன்று முதல் முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் பயணிகள் இந்தப் புதிய கட்டண முறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன
