
ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தனது வான்பரப்பை தற்காலிகமாக மூடியது
ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தனது வான்பரப்பை தற்காலிகமாக மூடியுள்ளது.
ஈரானினால் முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, விமானங்கள், பணியாளர்கள் மற்றும் நாட்டின் நிலப்பரப்பைப் பாதுகாப்பதற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
