
ஐசிசி விதியை மீறிய சல்மான் அலி ஆகா மீது ஐசிசி நடவடிக்கை
டாக்காவில் நடைபெற்ற பங்களாதேஷிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர் சல்மான் அலி ஆகா சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடத்தை விதிகளின் நிலை 1-ஐ (Level 1) மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் இன்னிங்ஸின் 39 ஆவது ஓவரில் சல்மான் அலி ஆகா ஆட்டமிழந்தார்.
அந்த விரக்தியில், அவர் தனது கையுறைகள் (Gloves) மற்றும் தலைக்கவசத்தை (Helmet) மைதானத்தில் முறையற்ற வகையில் தூக்கி எறிந்தார்.
இந்த செயல் “சர்வதேச போட்டியின் போது கிரிக்கெட் உபகரணங்கள் அல்லது ஆடைகளைத் தவறாகப் பயன்படுத்துதல்” தொடர்பான ஐசிசி விதி 2.2-ன் கீழ் குற்றமாகக் கருதப்படுகிறது.
சல்மான் அலி ஆகா தனது தவறை ஒப்புக்கொண்டு, போட்டி நடுவர் நீயமூர் ரஷீத் ராகுல் விதித்த தண்டனையை ஏற்றுக்கொண்டார்.
இதனால் முறையான விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை.
இவரது ஒழுக்கப் பதிவேட்டில் ஒரு ‘டிமெரிட்’ (Demerit) புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மாதங்களில் இவர் செய்யும் முதல் தவறு இதுவாகும்.
நிலை 1 மீறல்களுக்குக் குறைந்தபட்சம் அதிகாரப்பூர்வக் கண்டனமும், அதிகபட்சமாக போட்டி ஊதியத்தில் 50 சதவீத அபராதமும், ஒன்று அல்லது இரண்டு டிமெரிட் புள்ளிகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த குற்றச்சாட்டை கள நடுவர்கள் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், தன்வீர் அஹமட் மற்றும் மூன்றாவது நடுவர் குமார் தர்மசேன, நான்காவது நடுவர் மசூதூர் ரஹ்மான் முகுல் ஆகியோர் முன்வைத்தனர்.
இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 128 ஓட்டங்கள் வித்தியாசத்தில் (DLS முறைப்படி) வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
