அமெரிக்கா ‘கடுமையான பழிவாங்கலுக்கு’ முகம் கொடுக்க நேரிடும் என எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவரை இலக்கு வைத்தால், அமெரிக்கா ‘கடுமையான பழிவாங்கலுக்கு’ முகம் கொடுக்க நேரிடும் என ரஷ்யாவிற்கான ஈரானிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது, ஈரானிய தூதுவர் காசெம் ஜலாலி, தஹ்ரானின் புதிய உயர்மட்டத் தலைவரான மொஜ்தபா காமெனியை படுகொலை செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மொஜ்தபாவின் தந்தையான அலி காமெனி படுகொலை செய்யப்பட்டதன் பின்னர், ஈரானிய மக்கள் “இரத்தத்திற்கு இரத்தம் பழிவாங்குவதை” எதிர்பார்ப்பதாக ஜலாலி மேலும் தெரிவித்துள்ளார்.