குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை மூடும் அமெரிக்கா
குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வௌியேறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
அதற்கமைய தூதரக ஊழியர்களுக்கு அங்குள்ள முக்கிய ஆவணங்களை மாற்றவும், ரகசிய தரவுக் கட்டமைப்பில் உள்ள தரவுகளை முற்றிலுமாகத் அழிப்பதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தின் வான்வெளியில் ஊடுருவிய ஏவுகணைத் தாக்குதலைத் தங்கள் நாட்டு வான் பாதுகாப்புப் படை முறியடித்துள்ளதாக குவைத் இராணுவம் தெரிவித்துள்ளது.
குவைத்தில் ஈரான் நடத்திய ஆளில்லா வானூர்தி தாக்குதலில், 6 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
