இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதலில் 24 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்!

தெற்கு ஈரானின் மினாபில் இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதலில் 24 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மினாப் பகுதியில் உள்ள இராணுவ இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இந்தத் தாக்குதலை முன்னெடுத்திருந்தன.

எனினும், இதன்போது மாணவர்கள் தங்கியிருந்த பகுதி ஒன்று சேதமடைந்ததில் இந்த உயிரிழப்புகள் நேர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.