நாமல் ராஜபக்ச லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆற்றவிருந்த உரையும் ரத்து!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவினால், லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆற்றவிருந்த உரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மாணவர்கள் மற்றும் பிரசார குழுவினரின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வுகளில் மாணவர்களின் பங்கேற்பு குறையும் என்றதன் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஒக்ஸ்போர்ட் ஒன்றியத் தலைவர் கேத்தரின் யாங் தெரிவித்துள்ளார்.
இதனூடாக ஒன்றியத்தின் நோக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் எனவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
ஒன்றியத்தின் நோக்கத்தின் ஒரு முக்கிய பகுதி, மாணவர்களிடமிருந்து நேரடி, வெளிப்படையான கேள்விகளைக் கேட்பதை சாத்தியமாக்குவதாகும்.
மாற்று யோசனைகள் பரிசீலிக்கப்பட்ட போதிலும், மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக பங்கேற்க இயலாமை மன்றத்தின் நோக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என ஒக்ஸ்போர்ட் ஒன்றியத் தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.
“முக்கிய பங்குதாரர்கள் சமமான நிலையில் ஈடுபட முடியாத ஒரு நிகழ்வு, யூனியன் எளிதாக்க விரும்பும் வகையான வலுவான விவாதத்தை உருவாக்காது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, லண்டன் கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தில் நாமல் ராஜபக்சஆற்றவிருந்த உரையும் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், அங்கு பௌத்தமத நிகழ்வுகளில் கலந்துக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
