மகளிர் தினத்தில் வீர வனிதையர் விருது விழா

46ஆவது ஆண்டில் கால் பதித்துள்ள புதிய அலை கலை வட்டம் அதன் மகளிர் அணியை கடந்த ஆண்டு உருவாக்கியது. இந்த அணியினர் கடந்த ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வீர வனிதையர் விருது நிகழ்வை அறிமுகம் செய்தனர்.

இதன் இரண்டாம் கட்ட விழா இம்முறை மலரும் மகளிர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 7.03.2026 அன்று பி.பகல் 1.30 மணியளவில் கொழும்பு-11 செட்டியார் தெருவில் அமைந்துள்ள கல்யாண முருகன் மண்டபத்தில் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு நடை பெற்ற மகளிர் தின விழாவில் வழங்கப்பட்டது போல் இவ்வாண்டும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணங்களும், துப்புரவுத் தொழிலாளருக்கு சாறி மற்றும் அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படவுள்ளன.

நிகழ்வின் பிரதான அம்சமாக கலை,இலக்கியம், ஊடகம்,சமூக மற்றும் ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டுவரும் பெண்கள் 20 பேருக்கு வீர வனிதை விருதும் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளது.

பல்வேறு கலைக் கதம்ப நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மகளிர் அணி நிர்வாகம் அறிவிக்கிறது.