இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களின் பல பகுதிகளுக்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, நில்தண்டஹின்ன, மதுரட்ட, ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளுக்கும், பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல, கந்தகட்டிய ஆகிய பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
