
மட்டு.கிண்ணையடி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
மட்டக்களப்பு-வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கிண்ணையடி பிரதேசத்தில் உள்ள ஆற்றின் நடுவில், பல வாருடங்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம், இன்று வியாழக்கிழமை அதிகாலை, கிழக்கு மாகாண பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் சுற்றி வளைக்கப்பட்டது.
இதன்போது, கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும், 7 இலட்சத்து 58 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா கைப்பற்றப்பட்டதுடன், 30 ஆயிரம் மில்லிலீட்டர் வடி சாராயமும் கைப்பற்றப்பட்டது.
இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை நாளை வெள்ளிக்கிழமை வாழைச்சேனை நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக, கிழக்கு மாகாண குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தெய்வநாயகம் மேனன் தெரிவித்துள்ளார்.
