வங்காள விரிகுடாவில் மீண்டும் உருவாகும் குறைந்த அழுத்த தாழ்வு பகுதி!
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் எதிர்வரும் 15 ஆம் திகதி குறைந்த அழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு வௌியிட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
