காணிச் சட்டம் தொடர்பில் அரச அதிகாரிகளை தெளிவூட்டும் செயலமர்வு
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் காணிச் சட்டங்கள் தொடர்பான செயலமர்வொன்று இன்று புதன்கிழமை, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
வளவாளராக கிழக்கு மாகாண முன்னால் ஓய்வு நிலை காணி ஆணையாளர் க.குருநாதன் கலந்து கொண்டார்.
இதில் அரச காணி,காணி சட்டங்கள் ,காணிக் கச்சேரி உள்ளிட்ட பல விடயங்கள் தெளிவூட்டப்பட்டன.
காணி கொள்கை சட்டங்களை நடைமுறைப்படுத்தி காணி உரித்து விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவகர்கள்,காணி கிளை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






