T20 உலகக் கிண்ணப் பாதுகாப்பு
இருபதுக்கு 20 (T20) உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் போட்டிகளைக் காண வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக 1,500 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 600 போக்குவரத்துப் பிரிவு உத்தியோகத்தர்களும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, பார்வையாளர்கள் விளையாட்டரங்கிற்குள் பெரிய அளவிலான பயணப் பொதிகள், கண்ணாடிப் போத்தல்கள், ட்ரோன் (Drone) கருவிகள், சிறிய கூர்மையான கத்திகள், போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை எடுத்து வருவது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காகச் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
