
யாழில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணொருவர் உயிரிழப்பு
யாழில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணொருவர் இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
திருநெல்வேலி – கலாசாலை வீதியைச் சேர்ந்த சுபாகரன் ரதினி (வயது 49) என்ற, 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் இன்று காலை கழிப்பறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராத காரணத்தால் மகன் அவரை தேடிச்சென்று பார்த்தவேளை மயக்க நிலையில் காணப்பட்டுள்ளார்.
பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
