
கிளிநொச்சியில் கடந்த வருடம் கசிப்பு சார் குற்றங்களில் ஈடுபட்ட மூவாயிரம் பேர் கைது!
கிளிநொச்சியில் கடந்த வருடம் , மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள், கசிப்பு சார்ந்த குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்
கிளிநொச்சியில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட, போதைக்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதன்போதே, கடந்த வருடம் கசிப்புக் காய்ச்சிய, விற்பனையில் ஈடுபட்ட 3 ஆயிரத்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைவிட, சாராயத்தை சட்டவிரோதமாக வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் 21 பேரும், போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 19 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
