
நீர்கொழும்பு பிரபல விடுதியின் 9ஆவது மாடியிலிருந்து வீழ்ந்து சுவீடன் யுவதி உயிரிழப்பு!
நீர்கொழும்பு பகுதியில் உள்ள பிரபல விடுதி ஒன்றின் கட்டடத்தில் இருந்து கீழே வீழ்ந்து, வெளிநாட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுவீடன் நாட்டை சேர்ந்த 26 வயதுடைய யுவதியே, தனது கணவருடன் நீர்கொழும்பு பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் 9ஆவது மாடியில் தங்கியிருந்தபோது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் கணவர் ஒரு தொழிலதிபர் என்பதும், சம்பவம் நடந்த நேரத்தில் அவரது கணவர் வணிக நிமித்தமாக குருநாகல் பகுதிக்கு சென்றிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர் கீழே வீழ்வதற்கு முன்னதாக சுமார் ஒரு மணிநேரம் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவரது கையடக்கத் தொலைபேசியை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
