மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று (10) மாலை 4.00 மணி முதல் நாளை (11) மாலை 4.00 மணி வரை அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதுளை மாவட்டத்தில் பதுளை, ஹாலிஎல, பசறை, லுணுகல, வெலிமட, மீகஹகிவுல, கந்தகெட்டிய, ஊவா பரணகம ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மாத்தளை மாவட்டத்தில் அம்பகங்க கோரளை, உக்குவளை, லக்கல பல்லேகம, இரத்தோட்டை, வில்கமுவ.ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது .

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்பில் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு பொது மக்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.