
யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர்கள் கைது
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் இருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைதி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 20 போதை மாத்திரைகளுடன் 26 மற்றும் 28 வயதுடைய சந்தேக நபர்களே கைது செய்யப்பட்ட்னர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
