க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதிக்கான திகதி இன்று அறிவிக்கப்படும்

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி எதிர்வரும் ஜனவரி 12 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விரிவான சுற்றுநிருபம் இன்று (ஜனவரி 2) வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.