நுவரெலியாவில் ஏணியில் ஏறி ஆபத்தான பயணம் செய்யும் பொது மக்கள்

 

-நுவரெலியா நிருபர்-

 

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியோரத்தில் பிளக்பூல் ரூவான் எலிய சில்வர் போல் ஹோட்டல் அருகில் சமீபத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி மூவர் உயிரிழந்த சம்பவம் சோகம் சோகத்தை ஏற்படுத்தியது.

அந்த வகையில் அதனை அண்மித்த மேல் பகுதியில் வாழும் மூன்று குடும்பங்களை சேர்ந்த 16 பேர் குறித்த மண் சரிவால் அவர்கள் முன்பு பயணித்த படிக்கட்டுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது.

இதனால் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக இரண்டு ஏணிகளை கொண்டு ஏறி சென்று வருவது அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது.

அத்ததுடன் அப்பகுதி மக்களின் தினசரி வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. மேலும் பெரும் போராடடத்திற்கு மத்தியில் பாடசாலை மாணவர்கள்,
முதியவர்கள் மற்றும் பெண்கள் குறித்த ஏணியில் ஏறி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

மழைக் காலங்களில் இவ் இரும்பு ஏணி அதிகம் வழுக்கும் தன்மை கொண்டுள்ளதால் தவறி
விழுந்தால் உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்,

மேலும் எதிர் வரும் நாட்களில் மழைக் பெய்தால் இப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு பாரிய மண் மற்றும் கற்பாறைகள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே அதிகாரிகள் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன் பாதுகாப்பாக தங்கள் பிரதான வீதியில் இருந்து வீட்டுக்கு பயணம் செய்ய சிறந்தவழியினை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.