மஸ்கெலியாவில் அமெரிக்க உயர் கல்வி நிறுவனத்தின் கிளை திறந்து வைப்பு!
-மஸ்கெலியா நிருபர்-
மஸ்கெலியா பிரதேச மாணவர்களின் உயர் கல்விக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அமெரிக்க உயர் கல்வி நிறுவனத்தின் (American College of Higher Studies) கிளை கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மாணிக்கம் அறக்கட்டளை நிறுவனர் எம்.சதாசிவம், அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் திட்டப் பணிப்பாளர் கந்தையா விக்னேஸ்வரன், கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் சந்திரமோகன், நிர்வாக முகாமையாளர் காந்தரூபன் ஆகியோர் நிறுவனத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்


