கிழக்கு மாகாணத்தில் இன்று கன மழை?

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று புதன்கிழமை காலை 08.30 மணி முதல் வியாழக்கிழமை 18 ஆம் திகதி காலை 8.30 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிலவும் மழை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் சில இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கனமழை, பலத்த காற்று மற்றும் பலத்த மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.