நெசவுத் துறை ஊழியர்களுக்கான கொடுப்பனவு திருத்தம்

நெசவு திணைக்களத்துக்கு சொந்தமாக இருந்து 1980, 1982 காலத்தில் தனியார் மயப்படுத்தப்பட்ட மின்தறி (Pover Loom) திட்டங்களின் ஊழியர்களுக்கு செலுத்தப்படும் மாதாந்த கொடுப்பனவை திருத்தம் செய்தல்.
நெசவு திணைக்களத்தின் கீழ் செயற்பட்ட மின்தறி தொழிற்சாலைகள் தனியார் மயப்படுத்தப்பட்டமை காரணமாக தொழிலை இழந்த மற்றும் 10 ஆண்டு சேவைக் காலம் பூர்த்தி செய்யாமை காரணமாக ஓய்வூதிய உரித்தை பெற முடியாது போன ஊழியர்களுக்கு தற்போது செலுத்தப்படும் மாதாந்த கொடுப்பனவு, சமகால வாழ்க்கை செலவுடன் ஒப்பீடு செய்யும் போது போதுமானதல்ல என இனங்காணப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு அஸ்வெசும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நலன்புரி நன்மைகளை வழங்குவதற்கான 2025-04-21 திகதிய அமைச்சரவை தீர்மானத்துக்கமைய மேற்குறித்த இயலுமை தொடர்பாக ஆராய்ந்து பார்க்கப்பட்ட போதிலும், தற்போதுள்ள சட்ட ரீதியான ஏற்பாடுகளின் கீழ் நேரடியாக அவர்களுக்கு அவ்வாறான நிவாரணத்தை வழங்குவதற்கான இயலுமை இல்லையெனத் தெரியவந்துள்ளது.

எனவே, குறித்த ஊழியர்களில் தற்போது 5,000/- ருபாவை விடவும் குறைந்த மாதாந்த கொடுப்பனவு பெறும் ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவு 2026.01.01 திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் ரூபா 5,000/- எனத் திருத்தம் செய்து வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அமைச்சர் அவர்கள் அமைச்சரவைக்கு தெரிவித்திருந்தார்,

அதற்கமைய நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.