பல தனியார் நிறுவனங்களிடமிருந்து நிதி நன்கொடைகள்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’நிதியத்திற்கு, நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருகின்றன.

இன்று செவ்வாய்க்கிழமை பல்வேறு தனியார் நிறுவனங்கள் தமது நிதி நன்கொடைகளை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தன.

அதன்படி,

1- Macksons Paints Lanka (Pvt.) Ltd நிறுவனத்தின் தலைவர் மில்பர் மகீன் 15 மில்லியன் ரூபா

2- Sirilak Sea Food (Pvt.) Ltd நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டி. ஏ. நிஷ்ஷங்க, 05 மில்லியன் ரூபா

3- Narmatha Gold Center (Pvt.) Ltd நிறுவனத்தின் தலைவர் என். ஜெகதீஸ்வரன், 2.5 மில்லியன் ரூபா

4- IWW Steel Industries தனியார் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சிவலிங்கம் ரமேஷ் 2.5 மில்லியன் ரூபா

என்ற வகையில் நிதி நன்கொடைகள் அளிக்கப்பட்டன.

அந்த நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர்கள் குறித்த காசோலைகளை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்ததுடன், நிறுவனங்களின் பணிப்பாளர்கள் குழு உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.