கொழும்பு – கண்டி A01 வீதி போக்குவரத்துக்குத் திறப்பு

கொழும்பு – கண்டி A01 வீதி, தற்போது போக்குவரத்துக்குத் திறக்கப்படவுள்ளதுடன், அதற்கான நேரக் கட்டுப்பாட்டையும் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், கொழும்பு-கண்டி A01 வீதியானது காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மாத்திரமே போக்குவரத்துக்குத் திறக்கப்படவுள்ளது என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த வீதியில் நடைபெற்று வரும் அத்தியாவசிய மறுசீரமைப்புப் பணிகள் மற்றும் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு இந்த நேரக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் மற்றும் சாரதிகள் இந்த நேரக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.