
முல்லைத்தீவு மாவட்டத்தில் மின்சாரம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது!
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கு காரணமாக நாயாறுத் தொடுவாயில் அமைந்திருந்த மின்சாரக் கம்பம் நீரில் சேதமடைந்தது இதனால் கொக்கிளாய், கருணாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் பகுதிகளுக்கான மின்சாரம் முற்றாகத் தடைப்பட்டிருந்தது.
தற்போது முல்லைத்தீவு மின்சாரசபையின் கடும் முயற்சியின் பயனாக தற்போது, இன்று புதன்கிழமை நண்பகல் 1.40 மணியளவில் மின்சாரம் வழமைக்குத் திரும்பியது.
