
சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரிப்பு!
நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் 25 மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 336 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
