-யாழ் நிருபர்-
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மீனவர்களுடைய மீன்பிடி உபகரணங்கள், வாடிகள் என்பன பலத்த சேதமடைந்துள்ளன.
யாழ். வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் மீனவர்களுடைய மீன்பிடி உபகரணங்கள், சேதமடைந்துள்ளதுடன் மீன்பிடி வாடிக்களும் தூக்கி வீசப்பட்டுள்ளன.
கடற்பகுதிகளில் வீசிய கடுமையான காற்றால் பல மீனவர்களுடைய மீன்பிடி வலைகள் மணலால் மூடப்பட்டுள்ளன. சிலருடைய மீன்பிடி உபகரணங்கள் கடலோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு கடலோடு அடித்துச் செல்லப்பட்ட மீன் பிடி உபகரணங்களை மீனவர்கள் தேடி வருகின்றனர்.





