மட்டு.குருக்கள்மடம் ஐயப்பசுவாமி ஆலயத்தில் புனிதமாலை அணியும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டம், குருக்கள்மடம் ஸ்ரீ ஐயப்பன் தேவஸ்தானத்தில், புனித மாலை அணியும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை பக்தி பூர்வமாக நடைபெற்றது.

ஆலயத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற கணபதி ஹோமத்தை தொடர்ந்து, விசேட அபிசேக ஆராதனை நடைபெற்று, வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து, ஐயப்ப சுவாமி புனித விரதமாலை அணியும் நிகழ்வு நடைபெற்றது.

48 நாட்கள் விரதத்தில், ஹரிகரசுதன் ஐயப்பசுவாமியின் அருள் வேண்டி, பல நூற்றுக்கணக்கான பக்தர்களும், சுவாமிமார்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் விரதப்பூஜை வழிபாடுகள் யாவும் விஸ்வப்பிரம்மஸ்ரீ சுபேஸ்வரன் குரு சுவாமி தலைமையிலான குழுவினரால் நடாத்தப்படுகின்றது.

இதன் போது குருசுவாமியினால் விரதம் அனுஷ்டிக்கும் சுவாமிகளுக்கு புனிதமாலை அணிவிக்கப்பட்டது.