மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயரிழப்பு!

மட்டக்களப்பு – கரடியனாறு கார்மலை பகுதியில் மாடுகள் மேய்க்கச் சென்ற பண்ணையார் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கார்மலை பகுதிக்கு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழநதுள்ளார்.

இதனையடுத்து குறித்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.