2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை நாடு முழுவதும் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
மொத்தம் 2,362 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன, அதே நேரத்தில் அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு கடமைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதல் டிசம்பர் 5 வரை அனைத்து முக்கிய பாடப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக நடைபெறும்.


