காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை!

-யாழ் நிருபர்-

 

யாழ்ப்பாணத்தில்  ச.சயோசியன் (17 வயது) என்பவரை காணவில்லை என, அவரது தந்தை யாழ். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் – மல்லாகம், நரியிட்டான் பகுதியில் வசித்து வந்த குறித்த இளைஞன், கடந்த வெள்ளிக்கிழமை
வீட்டைவிட்டு சென்ற நிலையில், இன்னும் வீடு திரும்பவில்லை என பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள், பெற்றோர் அல்லது தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.