
வாழைச்சேனையில் பாடசாலைக்கு முன்னால் இயங்கி வந்த கசிப்பு விற்பனை நிலையம் முற்றுகை!
மட்டக்களப்பு வாழைச்சேனையில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்பாக முன்பாக நீண்ட காலமாக கசிப்பு விற்பனை இடம் பெற்று வந்த வீடு ஒன்றை நேற்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் முற்றுகையிட்டு ஒருவரை கைது செய்துள்ளனர்.
முழு நாடுமே ஒன்றாய் போதைப் பொருள் அற்ற தேசத்தை உருவாக்குவோம் எனும் தேசிய செயற்பாட்டு திட்டத்தின் கீழ் இடம்பெற்ற முற்றுகையின் போது 100 லீற்றர் கசிப்புடன் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் தெரிவித்தார்
கிழக்கு மாகாண குற்ற தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் ஆலோசனையின் கீழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் தலைமையிலான பொலிசார் சம்பவ தினமான நேற்று குறித்த சகிப்பு விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டு அங்கு கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரை கைது செய்ததுடன் அங்கிருந்து 100 லீற்றர் கசிப்பை மீட்டனர்
இதில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
கைர் செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
 
			
