முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது .
பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவின் உத்தரவின் பேரில், கடந்த ஒகஸ்ட் மாதம் 22ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அது தொடர்பான வழக்கு கடந்த ஒகஸ்ட் மாதம் 26ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதித் தரப்பினரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
