திருகோணமலையில் வாகன விபத்து
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மடத்தடி சந்தியில் சிறிய ரக பட்டாவுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.