தனியார் பேருந்தின் முன்பக்க மிதிபலகையில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
தும்முல்லையில் இருந்து கிருலப்பனை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் முன்பக்க மிதிபலகையில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவ்லாக் வீதியில் உள்ள பி.ஆர்.சி மைதானத்திற்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் பலத்த காயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.
பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 53 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.