சட்டவிரோத மீன்பிடி – 45 பேர் கைது
இலங்கை கடற்படை செப்டெம்பர் 29 முதல் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடத்திய தொடர் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 45 பேரை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள் மீது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்துதல், அனுமதியின்றி மீன்பிடித்தல் மற்றும் உள்ளூர் கடல் எல்லைக்குள் அங்கீகரிக்கப்படாத மற்றும் தீங்கு விளைவிக்கும் முறைகள் மூலம் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை கடல்களில் வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.