உச்சத்தை தொட்ட பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் சுட்டெண் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது.
அதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 143.98 புள்ளிகள் அதிகரித்து 22,318.72 புள்ளிகளாக முடிவடைந்தது.
இது முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 0.65% அதிகரிப்பாகும்.
இதற்கிடையில், S&P SL20 சுட்டெண்ணும் இன்று அதன் அதிகபட்ச மதிப்பை பதிவு செய்து, 63.65 புள்ளிகள் அதிகரித்து 6,226.03 புள்ளிகளில் நிறைவடைந்தது.
வர்த்தக நாளின் மொத்த புரள்வு 8.45 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது.
இதில் உள்ளூர் கொள்முதல்கள் ரூ. 8.30 பில்லியனாகவும், உள்ளூர் விற்பனை ரூ. 8.21 பில்லியனாகவும், வெளிநாட்டு கொள்முதல்கள் ரூ. 150 மில்லியனாகவும், வெளிநாட்டு விற்பனை ரூ. 248 மில்லியனாகவும் பதிவாகியுள்ளன.