பாதசாரிகள் கடவையால் வீதியை கடக்க முயன்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்!

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, 98ம் கட்டை சந்தியில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து நேற்று புதன்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.

இவ் விபத்தில் மூதூர் தோப்பூரை சேர்ந்த, 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர், பேருந்தில் இருந்து இறங்கி மஞ்சள் கடவையால் வீதியை கடக்கும் போது, வேகமாக வந்த மோட்டார் சைக்கில் அவர் மீது மோதியுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் வந்த நபர் காயங்களுக்குள்ளாகிய நிலையில் , சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.