-யாழ் நிருபர்-
அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர், தமது எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக இன்றையதினம் அரியாலை கிழக்கு பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் போராட்ட இடத்திற்கு வரவேண்டும் என்று கூறி விதியை வழிமறித்தனர், இதனால் போக்குவரத்து தடைப்பட்டது.
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் போராட்ட இடத்திற்கு வந்தபோது, மக்கள் தமது பாரிய எதிர்ப்பை வெளிப்படுத்தினர், குறித்த பகுதியில் இனிமேல் குப்பை கொட்டுவதற்கு குப்பை கொட்டும் வாகனங்கள் வந்தால் அந்த வாகனங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல, என எச்சரிக்கை விடுத்தனர், பின்னர் தவிசாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
பின்னர் போராட்டக்காரர்கள் பேரணியாக சென்று ஆளுனர் செயலகத்தில் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில்,
உலகமெங்கும் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக மக்கள் போராடி வருகின்றனர். அரியாலையூர் மக்களாகிய நாமும் நமது ஊரைப் பாதுகாப்பதற்காக நமது அழகிய ஊரின் நிலம், கடல், நீர்வளம், தூயகாற்று போன்ற இயற்கையின் கொடைகளை காப்பாற்றுவதற்காகப் போராட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
நல்லூர் பிரதேச சபை, எமது ஊர்மக்களுடன் எந்தவகையிலும் கலந்து பேசாது சூழலை மாசுபடுத்தக் கூடிய குப்பைகளை எமது ஊரில் வீசும் திட்டத்தை ஆரம்பித்திருப்பது எமது ஊர் மக்களால் மட்டு மல்ல இயற்கையையும் மனிதத்தையும் நேசிக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியாகும்.
இயற்கைப் பசளை உற்பத்தி என்ற பெயரில் ஏமாற்றுத்தளமாக எந்த வகை யிலும் வகைப்படுத்தப்படாத – மக்காத குப்பைகளை எமது ஊரில் கொட்டி எமது ஊரை குப்பைமேடாக மாற்றும் முயற் சியை நல்லூர் பிரதேச சபை உடனடியாகக் கைவிட வேண்டும்.
எமது இயற்கை வளங்கள் இன்றைய தலைமுறையான எமக்கு மட்டுமானதல்ல, எதிர்கால தலைமறைக்கும் சொந்தமான வையாகும். எமது ஊரின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து எதிர்கால சந்த தியிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு நமது தலைமுறைக்கு உண்டு. இதனால் மக்களுக்கும் இயற்கைக்கும் விரோதமான குப்பை மேட்டுத் திட்டத்தைக் கண்டித்தும் அதனைக் கைவிடக் கோரியும் எதிர்வரும் 8 திகதி மக்கள் அணிதிரள வேண்டுமென தெரிவித்தனர்.