நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் போதை மாத்திரைகளுடன் கைது

அநுராதபுரத்தில் மதவாச்சி நீதவான் நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் போதை மாத்திரைகளுடன் மிஹிந்தலை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மிஹிந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மெற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 40 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர் உபுல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.