பாடசாலை மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்சிப்பட்டறை

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த பாடசாலை மாணவர்களுக்கான சிறுகதை பயிற்சிப்பட்டறையானது, இன்று வியாழக்கிழமை பிரதேச செயலாளர் திரு உதயஸ்ரீதர் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த பயிற்சிப் பட்டறைக்கு வளவாளர்களாக எழுத்தாளர்களும், கவிஞர்களுமான பிர்தௌஸ் மற்றும் திரு. டேவிட் ஆகியோர் கலந்து கொண்டு மிகவும் சிறப்பான முறையில் பயிற்சிப் பட்டறையை மிகவும் சிறப்பான முறையில் நடாத்தியிருந்தனர்.

இந்த பயிற்சிப் பட்டறையில் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 75 க்கு அதிகமான மாணவர்களும், எழுத்தாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதேச செயலக கலாசார பிரிவு உத்தியோகத்தர்களால் மாணவர்கள் மற்றும் கலைஞர்களுக்காக பல்வேறு செயற்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இந்த நிகழ்வினை கலாசார உத்தியோகத்தர் திருமதி பற்பராசா ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.