இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954ஆம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதன்படி 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை 4 மணிக்கு இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.
இதன்போது விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
இந்தநிலையில், வாத்தி திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஜி.வி.பிரகாஷ் பெற்றார்.