
யாழ்.கொழும்புத்துறை பகுதியில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியில் 180 போதை மாத்திரைகளுடன், 18, 22 மற்றும் 24 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பொலிசாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
