குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

திருகோணமலை – கோமரங்கடவல பகுதியில் மதவாச்சி குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி இன்று திங்கட்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவன் குறித்த பகுதியைச் சேர்ந்த பேமரத்னகே உமேஷ் ஆலோக (வயது-15) என தெரியவந்துள்ளது.

வழமையாக நண்பர்களுடன் குளிப்பதற்கு செல்வதாகவும் இன்றும் பிற்பகல் 1.30 மணியளவில் வீட்டிலிருந்து சென்றதாகவும் பின்னர் உயிரிழந்த நிலையில் இன்றிரவு 8 மணியளவில் மீட்கப்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவன் கோமரங்கடவல மதவாச்சி சிங்கள வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி பயின்று வருபவர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு
குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு