வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்,
மற்றொருவர் காயமடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை 10.30 மணியளவில் வேவா வீதி பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஒரு காரில் வந்த குழுவினர், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை மோதிய பின்னர், அவர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கி, பின்னர் துப்பாக்கியால் சுட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றவர் காயங்களுடன் தப்பினார்.
தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது ஒரு ரிவால்வர் என பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின்படி, பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்ற வழக்கு தொடர்பாக வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு திரும்பியிருந்தனர்.
உயிரிழந்தவர் செப்டம்பர் 9 ஆம் தேதி நீதிமன்ற தீர்ப்பை பெறவிருந்தார்.
வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
