நல்லூர்த் திருவிழாவில் நித்யாஶ்ரீ மகாதேவனின் கர்நாடக பக்தி கச்சேரி அரங்கேற்றம்

-கிண்ணியா நிருபர்-

யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகம் ஊடாக ஆண்டுதோறும் நடைபெறும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று டாக்டர் நித்யாஶ்ரீ மகாதேவன் அவர்களால் நடத்தப்பட்ட பக்தி சார்ந்த கர்நாடக இசைக் கச்சேரியை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சி, இந்திய அரசின் 12 மில்லியன் அமெரிக்க டாலர் உதவித் தொகையால் கட்டப்பட்ட யாழ்ப்பாணத் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் (JTCC) நடைபெற்றது.

பாடகி நித்யாஶ்ரீ, முருகன் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பக்திப் பாடல்களை ஆன்மாவை உலுக்கும் வகையில் பாடி, பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தார்.

அவருடன் இந்தியாவிலிருந்து வந்த திறமையான கலைஞர்களின் இசைக் குழுவும் இணைந்து கச்சேரியில் பங்கேற்றது.

இந்த கச்சேரி நிறைந்த பார்வையாளர்களின் முன்னிலையில் நடைபெற்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா காலத்தில் நிலவிய ஆன்மீகச் சூழலுடன் ஒத்திசைந்த இந்நிகழ்ச்சி, அனைவரின் உள்ளங்களிலும் ஆழமான பக்தி உணர்வை எழுப்பியது.

இந்த நிகழ்ச்சி இந்திய சாஸ்திரிய இசை மற்றும் பண்பாட்டு மரபின் கொண்டாட்டமாகவும், இந்தியா மற்றும் இலங்கையின் வட மாகாணத்திற்கிடையிலான ஆன்மீக மற்றும் பண்பாட்டு பிணைப்புகளை மேலும் வலுப்படுத்துவதாகவும் அமைந்தது.

நல்லூர்த் திருவிழாவில் நித்யாஶ்ரீ மகாதேவனின் கர்நாடக பக்தி கச்சேரி அரங்கேற்றம்
நல்லூர்த் திருவிழாவில் நித்யாஶ்ரீ மகாதேவனின் கர்நாடக பக்தி கச்சேரி அரங்கேற்றம்