மியான்மரில் டிசம்பரில் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது

மியன்மாரில் எதிர்வரும் டிசம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 28ஆம் திகதி முதல் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என இராணுவ ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாட்டில் பெரும்பாலான பகுதிகள் ஜனநாயக ஆதரவு போராளிகள், சிறுபான்மை கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்தாலும் 330 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியது. ஆங் சான் சூகி உள்ளிட்ட ஆளுங்கட்சி தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.