இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என  திணைக்களம்  தெரிவித்துள்ளது .இருப்பினும் நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற காலநிலையே  நிலவக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர்  வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு  வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.