வீட்டிற்கு தீ வைத்த வீட்டு உரிமையாளர் கைது – வாழைச்சேனையில் சம்பவம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி 3 ஆம் வட்டாரம் எம்.கே. வீதியிலுள்ள வீடொன்று இன்று திங்கட்கிழமை (18) காலை தீப்பற்றி எரிந்துள்ளது.
ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து வீட்டில் பரவிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீப்பற்றிய வீட்டுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதா தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீ வைப்பு சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக இந்த தீ வைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.